Sunday 19th of May 2024 06:04:51 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனா தொற்று 6 இலட்சத்து 46 ஆயிரத்தை கடந்து அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று 6 இலட்சத்து 46 ஆயிரத்தை கடந்து அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 6 இலட்சத்து 46 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான மேலும் 996 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 646,034ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 20,888 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608,924ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE